அனைவருக்கும் வணக்கம்,
தற்போதைய பேரிடர் காரணமாகத் தாயகத்தில் உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகள் பெற்றுக்கொள்ள முடியாமல்
இன்னல்களுக்கு உள்ளளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உதவுவதற்காக, எமது கோரிக்கையினை ஏற்று, தங்களால் முடிந்த நிதி உதவியினை வழங்கிவரும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.?
தாயகத்தில் மக்களுக்கான உதவிகள் அங்கே பதிவுசெய்து இயங்கிவரும் வெளிச்சம் பவுண்டேசன் எனும் அமைப்பினூடாகத் தாயகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் உள்ள அதி கூடிய இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பெற்றுள்ளது.
இதுவரை நிதி உதவிகளை வழங்காதவர்கள் கூடிய விரைவில் வழங்கியுதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
க. பார்த்திபன்,
ஒருங்கிணைப்பாளர்