தகவல் Archive

தமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது

 திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் இதன் ...Read More

முத்தமிழ் விழா 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ் ...Read More

தமிழ் இளையோர் மாநாடு 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் மாநாடு 2019 தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண் மாநகரில் நடைபெற்றது. இதில் தொண்ணூறுக்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டு சுவிஸ் நாட்டில் தமிழ்மொழிக்கல்வி, கலைகள், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு, அதனைக் காக்கவேண்டிய இன்றியமையாமை பற்றிக் கலந்துரையாடினர். அத்துடன் தமிழர்நலன் மற்றும் தமிழ்மொழிக்கல்வி, ...Read More

சிகாகோவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு

பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு இந்த ஆண்டு (2019) யூலை மாதம் 4 ஆம் நாள் முதல் 7 ஆம் நாள் வரை அமெரிக்கா சிகாகோ நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த மகாநாட்டினை வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA)இ  சிகாகோ தமிழ்ச்சங்கமும், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தோடு (IATR) இணைந்து நடாத்தின. அமெரிக்கா உட்பட உலகமெங்கும் வாழும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் ...Read More

UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ள தமிழ்மாணவர்கள்

தமிழ்க்கல்விச்சேவை சுவிற்சர்லாந்து ஆண்டுதோறும் வலயமட்டமாக நடாத்திவரும் மாணவர்களுக்கான மெயவல்லுனர் போட்டிகள் இவ்வாண்டு UBS Kids Cup போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக வலே, பேர்ண், பாசல், சூரிச், செங்காளன் ஆகிய வலயங்களில் நடைபெற்றன. அவற்றுள் முதலாவதாக வலே வலயத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுள் பத்தொன்பது மாணவர்கள்  UBS Kids Cup Vaud மாநகர இறுதி போட்டியில் பங்குபற்றுவதற்கான தகைமையைப் பெற்றுள்ளார்கள் என்பதை மகிழ்வோடு அறியத்தருகிறோம். ...Read More