தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து மற்றும் சூரிச் ஆசிரியர் பயிற்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடாத்தும் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிநெறி – நேரடி வகுப்புகள் அனைத்து மாநிலங்களிலும் 2022-2024 காலப்பகுதியில் நடைபெறவுள்ளன. இதற்காகப் பன்னிரெண்டு பயிற்றுநர்கள் வளவாளர்களாகப் பயிற்றப்பெற்றுள்ளனர். அவர்கள் அனைத்து மாநிலங்களிலும் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறியினை வழங்கவுள்ளார்கள்.

இப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 2022 மே மாதம் ஆசிரியர்களிடமிருந்து கோரப்பட்டது. இவ்வாண்டு நான்கு மாநிலங்களில் பயிற்சிவகுப்புகள் நடைபெறவுள்ளன.

முதலாவது தொகுதியினருக்கான பயிற்சி 21.08.2022 ஆம் நாள் ஆர்க்கோ மாநிலத்தில் தொடங்கியது. ஏனைய மாநிலங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளவாறு உரிய காலத்தில் வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் எமது ஆசிரியர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து